உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கபடுவர்.விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணியில் குறைந்தது, 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும், 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது இணைதள முகவரியான https://dsdcpimms.tn.gov.inபதவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து வரும் ஜூன் 13ம் தேதி மாலை 5:00 மணிக்குள் இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்:300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் தனித்தனியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ