சாலை மறியல் 25 பேர் மீது வழக்கு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சாலை மறியல் செய்த அரசம்பட்டு கிராம மக்கள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக அனுமதியின்றி சாலை மறியல் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ராஜேஷ் தலைமையிலான 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.