அரசு கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் குப்புசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் பேச்சாளர் தீர்த்த ஏழுமலை பேசினார்.நிகழ்ச்சியில், வணிகவியல் துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பேராசிரியர் சண்முகம் மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.