மேலும் செய்திகள்
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு
11-Sep-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் புதிதாகக் கட்டப்படும் கலெக்டர் அலுவலக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். மீதமுள்ள பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி பொறியாளர் இமாம் ஷெரிப் உடனிருந்தனர்.
11-Sep-2025