டாம்கோ, டாப்செட்கோ கூர்ந்தாய்வு கூட்டம் ரூ.26.91 கோடி கடன் வழங்க தீர்மானம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கூர்ந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் வினாயகமூர்த்தி தலைமை தாங்கினர். கூட்டத்தில் 3 டாம்கோ குழுக்களுக்கு 50.20 லட்சம் ரூபாய், 15 டாப்செட்கோ குழுக்களுக்கு 2.18 கோடி ரூபாய் என மொத்தமாக 26.91 கோடி ரூபாய் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதுவரை 15 டாம்கோ குழுக்களுக்கு 26.60 கோடி ரூபாயும், 36 டாப்செட்கோ குழுக்களுக்கு 52.21 கோடி ரூபாயும் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில், சரக துணைப்பதிவாளர்கள் (கள்ளக்குறிச்சி) சுகந்தலதா, (திருக்கோவிலுார்) குறிஞ்சிமணவாளன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொதுமேலாளர் (கடன்) கணபதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சீரங்கன். சின்னசேலம் ஆவின் விரிவாக்க அலுவலர் பூமாலை, மாவட்ட தொழில் மைய அலுவலர் சந்திரசேகர், அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா, மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கராபுரம் வட்ட சரக மேற்பார்வையாளர் அபுபக்கர் பங்கேற்றனர்.