உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

சங்கராபுரம் ; சங்கராபுரம் வட்ட விவசாயிகள் பயிர் பாதுகாப்பீடு செய்து பயன்பெறுமாறு சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ராபி பருவத்தில் சம்பா நெல்,பருத்தி,மக்காசோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். காப்பீடு செய்ய கடைசி தேதி இம்மாதம் 15 ம் தேதி. நெல் ஏக்கருக்கு ரூ.511,மக்காசோளம் ஏக்கருக்கு ரூ.308, பருத்தி ஏக்கருக்கு ரூ. 483. உளுந்து ஏக்கருக்கு ரூ. 228.எனவே விவசாயிகள் சிட்டா,ஆதார்,வங்கி கணக்கு புத்தகம்,அடங்கலுடன் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்களில் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ