உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் முன்னணி பேரூராட்சியாக மணலுார்பேட்டை உருவாகிவருகிறது தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் பெருமிதம்

மாவட்டத்தில் முன்னணி பேரூராட்சியாக மணலுார்பேட்டை உருவாகிவருகிறது தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் பெருமிதம்

மணலுார்பேட்டை பேரூராட்சி புது பொலிவு பெற்று வருக்கிறது என பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு தலைமையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வின் தனிக் கவனத்தால் அவரது வழிகாட்டுதலுடன் மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு அதிக நீதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணி திட்டங்கள் சிறப்புர செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக ரூ. 39 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் சீரமைப்பு பணி, ரூ. 1.24 கோடி மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கம். ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய நூலகம், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுமானம், சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் பேரூராட்சியின் பெரும்பாலான சாலைகள் தார் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அனைவருக்கும் சுகாதாரமான தடையற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.பேரூராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன், செயல் அலுவலர் மகேஸ்வரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அரவணைப்புமே மாவட்டத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்க காரணம் என பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி