உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டணம் ஆகியவை உதவித் தொகையாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு 2024-25ம் கல்வியாண்டில் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_Schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.தொடர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, புதுப்பித்தல் விண்ணப்பம் டிச.,15 ம் தேதிக்குள் மற்றும் புதியது விண்ணப்பம் ஜன.,15 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ