உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் குழாய் இல்லாததால் வீணாகும் கால்நடை தொட்டி

குடிநீர் குழாய் இல்லாததால் வீணாகும் கால்நடை தொட்டி

சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜெ.ஜெ., நகரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2019ல், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.ஆனால், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல், குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலில் மேய்ச்சலுக்காக வந்து செல்லும் கால்நடைகளின் தாகம் தீர்க்க கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்தி, தொட்டியில் முறையாக தண்ணீர் நிரப்பி பராமரிக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை