உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தினமலர் செய்தி எதிரொலி மெக்ளின்புரத்தில் உடைந்த குடிநீர் பைப் சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி மெக்ளின்புரத்தில் உடைந்த குடிநீர் பைப் சீரமைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, மெக்ளின்புரம், புண்ணியநாதன் தெருவில், சில நாட்களுக்கு முன், பேரூராட்சி பொது நிதியின் கீழ், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.அப்போது, அப்பகுதியில் பட்டா நிலத்தின் மீது கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார்.இதையடுத்து, கால்வாயின் ஒரு பகுதி இடித்து அகற்றம் செய்யப்பட்டது. அப்பணியின் போது, அப்பகுதியில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட குடிநீர் பைப் சீரமைக்காமல் இருந்தது.இதனால், குடிநீர் பைப் வழியாக தண்ணீர் செல்லும் நேரத்தில், நீர் கசிந்து வீணாவதோடு, மீண்டும் அதே பைப் வழியாக சேற்று தண்ணீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக மெக்ளின்புரம், மழைநீர் வடிகால்வாயில் நிலத்தின் கீழ், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் குடிநீர் பைப் சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை