உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ரயில்வே முன்பதிவு மையம் முழு நேரம் இயங்க எதிர்பார்ப்பு

காஞ்சியில் ரயில்வே முன்பதிவு மையம் முழு நேரம் இயங்க எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் 2002ல் துவக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தில், கணினி முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்கி வருகிறது. இங்கு தொலைதுாரம் செல்லும் ரயிலில் பயணிக்க தினமும் நுாற்றுக்ணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்குக்கு முன் காலை, 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மதியம் 2:15 மணி முதல், இரவு 8:00 மணி என, நாள் முழுதும், முன்பதிவு மையம் இயங்கி வந்தது.இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது கணினி முன்பதிவு மையம் முழுமையாக மூடப்பட்டது. பல்வேறு தளர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து, காலை 8:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை என, அரை நாள் மட்டுமே கணினி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.இதனால், மதியத்திற்கு மேல் வருவோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும நிலை உள்ளது. எனவே, பழையபடி, காலை 8:00 மணி முதல் 2:00 மணி வரையிலும், மதியம் 2:15 மணி முதல், இரவு 8:00 மணி என, கணினி ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் நாள் முழுதும் இயங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை