உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்

துார்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்

களக்காட்டூர், காஞ்சிபுரம், களக்காட்டூரில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் ராமாபுரம், மேட்டுத்தெரு வழியாக, வேடல் ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய்க்கு செல்கிறது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே செடி, கொடிகளால் கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைக்காலத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குவதோடு, குடியிருப்புகளை மழைநீர் சூழும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வேண்டும் என, களக்காட்டூர் வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை