கோட்ட பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் கோட்ட பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், கண்காணிப்பு பொறியாளராக ராமச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், பிப்., மாத இறுதியில் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, ஸ்ரீபெரும்புதுார் கோட்டப்பொறியாளர் ஆனந்தன் என்பவருக்கு, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.