உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 502 மகளிர் குழுக்களுக்கு ரூ.60 கோடி வங்கி கடனுதவி

502 மகளிர் குழுக்களுக்கு ரூ.60 கோடி வங்கி கடனுதவி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 502 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 60 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற் றும் காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும்ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக மாநில ஊரக, நகர்ப்புறவாழ்வாதார இயக்கம் செயல்படுகிறது. இந்த இயக்கம் மூலம், மூன்று ஆண்டுகளில், இதுவரையில் 25,329 மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு 1,591 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, காஞ்சிபுரம்கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், நடந்த வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 502 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 60 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவித்தொகையை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து5,000 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டன இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காஞ்சிபுரம்ஒன்றியக் குழுத் தலைவர் மலர்க்கொடி, திட்ட இயக்குநர் பிச்சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ