உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டிற்கு வராமலேயே கால்நடை குடிநீர் தொட்டியில் விரிசல்

பயன்பாட்டிற்கு வராமலேயே கால்நடை குடிநீர் தொட்டியில் விரிசல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில், நுாலக கட்டடம் அருகில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.ஆனால், குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் வகையில், குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. பயன்பாட்டிற்கு வராமலேயே குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடை குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், குழாய் வசதியுடன், குடிநீர் தொட்டியை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, கருப்படிதட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ