உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படிக்கட்டில் தவறி விழுந்து மூதாட்டி பலி

படிக்கட்டில் தவறி விழுந்து மூதாட்டி பலி

உத்திரமேரூர்:பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ரோஸ், 70. இவர், கடந்த 30ல் தன் வீட்டு மாடி படிகட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.இதையடுத்து, பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி