உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 37,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பை கழிவுகளை, தூய்மை பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், காஞ்சிபுரம் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின், மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது. பின், உரமாகவும், மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பையாகவும் மாற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பைநல்லூர் பகுதியில், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, காவனூர் - புதுச்சேரி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது.இதனால், குப்பையில் இருந்து நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், காற்று வீசும் நேரங்களில் பறக்கும் குப்பை, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !