மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (27.04.2025) திருவள்ளூர்
27-Apr-2025
காஞ்சிபுரம்:குரு பகவான் நாளை மதியம் 1:19 மணியளவில், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், முடங்கு வீதியில் உள்ள காயோகணீஸ்வர் குரு கோவிலில் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபஆராதனை நடக்கிறது. மறுநாள் 12ம் தேதி மதியம் 12:00 மணிக்கு குரு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், வரும் 15ம் தேதி ஊஞ்சல் உத்சவமும் நடக்கிறது.காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலை கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள 27 நட்சத்திர திருக்கோவிலில், திருக்கல்யாண திருக்கோலத்துடன் அருள்பாலிக்கும் தாரை சமேத குருபகவான் சன்னிதியில், குரு பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.காலை 8:00 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதி தேவதைகள், வள்ளி தேவ சேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வரர், ராகு கேது உள்ளிட்ட சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம், காலை 9:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 27 நட்சத்திர பரிகார சாந்தி ஹோமம், மதியம் 12.00 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ கலச அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:50 மணிக்கு குரு பெயர்ச்சி மகாதீப ஆராதனை நடைபெறுகிறது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், குரு பரிகார ஸ்தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.ஆதி குருவாக விளங்கும், மூலவர் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி அளித்து வருகிறார். இங்கு குரு பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.காலை முதல் இரவு வரையில் குரு பகவான் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. கோவில் புரனமைப்பு பணி நடந்து வருவதால் லட்சார்ச்சனை விழா நடைபெறாது. அதற்கு பதிலாக, சிறப்பு வழிபாடு நடைபெறும்.புதுப்பாக்கம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. குரு பெயர்ச்சி விழா முன்னிட்டு, நாளை பகல், 12:00 மணிக்கு மகா அபிேஷகம். தொடர்ந்து பகல், 1:20 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற உள்ளது.
27-Apr-2025