உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெட்டி கடையில் குட்கா விற்றவருக்கு காப்பு

பெட்டி கடையில் குட்கா விற்றவருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:மதுரமங்கலத்தில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, மதுரமங்கலம் பஜனை கோவில் தெருவில் உள்ள பெட்டிகடை ஒன்றில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், விமல், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள 4.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் செந்தில்குமார், 40, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை