உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாத்தணஞ்சேரி ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

சாத்தணஞ்சேரி ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் சாத்தணஞ்சேரி மற்றும் சீட்டணஞ்சேரி கிராமங்களில் உள்ள 240 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.கடந்த 2020- -- 21ம் ஆண்டு, இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ், 68.70 லட்சம் ரூபாய் செலவில், கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும், ஏரி தூர்வாருதல் மற்றும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளது.இதனால், ஆண்டுதோறும் பருவமழைக்கு ஏரியில் குறைவான அளவு தண்ணீரை சேகரமாகி வருகிறது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,சாத்தணஞ்சேரி ஏரி, கடைசியாக, 1996ல், முழு கொள்ளளவு எட்டியது. அதன் பின், இதுவரை ஏரியின் முழு கொள்ளளவில் பாதி அளவுக்கான தண்ணீர் கூட சேகரமாகவில்லை.சாத்தணஞ்சேரி ஏரிக்கு, பாலாற்றில் இருந்து பினாயூர் வழியாக நீர்வரத்து கால்வாய் உள்ளது. ஏரி நிரம்ப இக்கால்வாய் முக்கிய நீர் ஆதராமாகும். இந்த கால்வாயின் பெரும்பாலான பகுதிகளை பினாயூரில் உள்ள சிலர் தூர்த்து ஆக்கிரமித்துள்ளனர்.மேலும், இந்த ஏரிக்கான நீர் வரத்து கால்வாய் துவங்கும் பாலாற்று பகுதி மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் நீர் வரத்து கால்வாய் வாயிலாக ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.எனவே, ஏரிக்கான நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பாலாற்று படுகையில் மண்மேடு அமைத்து நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் செல்ல ஏதுவாக வழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாத்தணஞ்சேரி ஏரிக்கான நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக வருவாய்த் துறையிடம், நீர்வளத் துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை