உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பழுதடைந்த ஏ.டி.எம்., மையம் பாரத வங்கி சீரமைக்குமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பழுதடைந்த ஏ.டி.எம்., மையம் பாரத வங்கி சீரமைக்குமா?

பழுதடைந்த ஏ.டி.எம்., மையம் பாரத வங்கி சீரமைக்குமா?

உத்திரமேரூர், கச்சேரி தெரு, தாலுகா அலுவலகம் அருகில், பாரத வங்கியின் ஏ.டி.எம்.,மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கக்கூடிய இயந்திரம் பழுதடைந்து பல மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்., மையத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதேபோல, புக்கத்துறை சாலையில், உள்ள பாரத வங்கியின் ஏ.டி.எம்., மையத்தின் ஷட்டரும் மூடப்பட்டுள்ளது.எனவே, செயல்படாமல் உள்ள ஏ.டி.எம்., மையத்தை உடனடியாக சீரமைக்க பாரத வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கோபாலகிருஷ்ணன்.உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை