மாரியம்மன் கோவிலில் 21ல் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேக விழா, வரும் அக்., 21ம் தேதி, வெகுவிமரிசையாக நடக்க உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.