மேலும் செய்திகள்
முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்
09-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், 56 ஆண்டுகளுக்குப் பின், 2014ம் ஆண்டு முதல், கோவிலில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தம் என, அழைக்கப்படும் கோவில் வளாகத்தில் உள்ள, தெப்பகுளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போற்சவம், தொடர்ந்து மூன்று நாட்கள் விமரிசையாக நடந்து வந்தது.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்ததால், நான்கு ஆண்டுகளாக தெப்போற்சவம் நடைபெறவில்லை. பல்வேறு திருப்பணிகள் முடிந்து, கடந்த பிப்.,1ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.இந்நிலையில், இந்தாண்டு தெப்போற்சவம் வரும் 20ம் தேதி துவங்குகிறது. இதில், தொடர்ந்து மூன்று நாட்களும், மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி உலா வருவார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன், கோவில் பணியாளர்கள், கோவில் திருக்குள தெப்போற்சவ டிரஸ்ட் காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் செய்து வருகின்றனர்.
09-Nov-2024