உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் வசதி கேட்கும் பயணியர்

காஞ்சியில் இருந்து கோவைக்கு நேரடி பஸ் வசதி கேட்கும் பயணியர்

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து, கோவைக்கு நேரடி பேருந்து வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமானோர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு தொழில், சிகிச்சை, சுற்றுலா காரணங்களுக்காக சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வோர், செங்கல்பட்டு, பெருங்களத்துார் போன்ற ஊர்களுக்கு சென்று, கோவை செல்லும் பேருந்துகளை பிடிக்க நேரிடுகிறது. இது பயணியருக்கு வீண் அலைச்சலும், பண, நேர விரயம் ஏற்படுகிறது. இதனால், காஞ்சிபுரத்திலிருந்தே நேரடியாக கோவைக்கு பேருந்து சேவை துவக்கினால், இங்கிருந்தே செல்ல முடியும் என, பயணியர் தெரிவிக்கின்றனர். சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு பேருந்து இயக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து துறையின், விழுப்புரம் கோட்ட அதிகாரிகள், இந்த கோரிக்கையை ஏற்று, கோவைக்கு பேருந்து சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ