புத்தேரிக்கு மினி பஸ் இயக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, புத்தேரிக்கு மினி பஸ் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. புத்தேரி சமூக ஆர்வலர் வெங்கடேசன் என்பவர், அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் போக்குவரத்து கழக மண்டல அலுவல கத்திற்கு அனுப்பியுள்ள மனு: காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினிபஸ் சேவைக்கு விரிவான திட்டம் குறித்து, மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கச்சபேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், மிஸ்ரி நகர், புத்தேரி, சாலபோகம், பிள்ளையார்பாளையம், கீழ்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், மூங்கில் மண்டபம் வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில், மினிபஸ் சேவையை துவக்க அரசு போக்குவரத்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.