வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ஸ்ரீபெரும்புதுா : வல்லக்கோட்டையில், முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலில், ஐந்தடி உயரத்தில் மகாஞானகணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிலையில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.