உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எலும்புக்கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்

எலும்புக்கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்

புத்தேரி, காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், மழைநீர் வடிகால்வாய் ஒட்டியுள்ள மின்கம்பத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி