உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடைக்கு நிழற்கூரை வசதி கருப்படிதட்டடையினர் எதிர்பார்ப்பு

ரேஷன் கடைக்கு நிழற்கூரை வசதி கருப்படிதட்டடையினர் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடையில், இயங்கும் ரேஷன் கடையில், 399 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெய்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் கடைக்கு வருவோர், 'பில்' போட வரிசையில் நிற்கும் இடத்தில் கூரை வசதி இல்லை. இதனால், வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், வயதானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், வெயிலில் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, கருப்படிதட்டடை ரேஷன் கடையில், கார்டுதாரர்கள் பில் போடும் இடத்தில் கூரை வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி