மேலும் செய்திகள்
கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்
25-Sep-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர், திருக்குமரன் தெருவில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் இடத்தில் சிறுபாலம் இல்லாததால், கால்வாய் வாயிலாக மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறுபாலம் கட்ட வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2.31 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அப்பகுதியில் மழைநீர் தடையின்றி செல்லும்.
25-Sep-2024