மேலும் செய்திகள்
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம்
23-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் துவங்கியது. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உத்சவத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். அதன்படி, முதல் நாள் உத்சவமான நேற்று காலை தங்கப்பல்லக்கிலும், இரவு சப்பரத்திலும் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தனர். இரண்டாம் நாள் உத்சவமான இன்று காலை தங்கப்பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையிலும், மூன்றாம் நாள் உத்சவமான நாளை காலை தங்கப்பல்லக்கில் முரளி கிருஷ்ணன் அலங்காரத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வருகிறார். ஏழாம் நாள் உத்சவமான வரும் 29ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ராமர் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 10ம் நாள் உத்சவமான அக்., 2ம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. அக்., 3ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபபிரகாசருக்கு விமான உத்சவத்துடன், துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.
23-Sep-2025