கூட்டுறவு துறை பாடலுக்கு ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்
காஞ்சிபுரம்:சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு துறை குறித்து, தனி பாடல் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், ஐந்து நிமிடங்களில் ஒலிக்கும் வகையிலும், அதற்கேற்ப இசை அமைக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.கூட்டுறவு துறையினர், பொது மக்களுக்கு எழுச்சி மற்றும் உத்வேகம் தரக்கூடிய பாடலாகவும் இருக்க வேண்டும்.நீங்கள் அனுப்பும் பாடலுக்கு, சிறப்பு குழுவினரால் தேர்வு செய்யப்படும் பாடலுக்கு, 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படும்.நீங்கள் பாடிய பாடலை கூரியர், தபால் வாயிலாக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, நெ.170, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -600 010 என்ற முகவரி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் gmail.com<08>என்றமின்னஞ்சல்முகவரிக்குமேமாதம்ம்தேதிமாலைமணிக்குள்அனுப்பிவைக்கவேண்டும்எனகாஞ்சிபுரம்மண்டலகூட்டுறவுஇணைப்பதிவாளர்ஜெயஸ்ரீதெரிவித்தார்08>