உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்புகரூர்:அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில், வினாடிக்கு திறக்கப்பட்ட, 500 கன அடி தண்ணீர், 370 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 65.98 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 15 கன அடி தண்ணீர் வந்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 213 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 19.97 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ