தமிழ் வளர்ச்சி துறை இலக்கிய கூட்டம்
தமிழ் வளர்ச்சி துறை இலக்கிய கூட்டம்கரூர்:கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை சிறப்பிக்கும் இலக்கிய கூட்டம், அட்லஸ் கலையரங்கில் நடந்தது.அதில், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, ல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000 ரூபாய், மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றுகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, திரு.வி.க., மன்ற தலைவர் புலவர் அருணா பொன்னுசாமி, தமிழ்த்துறை தலைவர் அழகர், தமிழறிஞர்கள் இறையரசன், எழில்வாணன், இளமுருகு பொற்செல்வி, மணிமாறன், மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.