உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனைகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, வல்லம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. வாய்க்கால் பாசனம் மூலம், வாழை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நன்கு விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, தினந்தோறும் லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்களை, உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை