சேதமடைந்துள்ள பயணிகள்நிழற்கூடம்; சீரமைக்க எதிர்பார்ப்பு
சேதமடைந்துள்ள பயணிகள்நிழற்கூடம்; சீரமைக்க எதிர்பார்ப்புகரூர்:கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற் கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - ஈரோடு சாலை புன்னம்சத்திரத்தில் கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடிருப்புகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளும் போடப்பட்டது.பொதுமக்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களாக பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. விளக்குகளும், மேல் தளமும் உடைந்துள்ளது. இதனால், நிழற்கூடத்தில் பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, புன்னம்சத்திரம் பஸ் ஸ்டாப்பில், சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.