உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம் :மகிளிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகளில் வளர்ந்துள்ள வெண்டைக்காய்களை பறித்து, கரூர், திருச்சி, மற்றும் உள்ளூர் வாரச் சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். வெண்டைக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ