உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம் :லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை ஏலம் கமிஷன் மண்டியில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.நேற்று நடந்த ஏலத்தில் வாழைத்தார்கள் விற்பனை அதிகரித்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களை கூடுதலாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 150 ரூபாய்க்கு விலையில் விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை