அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து போட்டி
கரூர், செப். 15- முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், அரசு ஊழியர்களுக்கு இறகு பந்து உள்பட பல போட்டிகள் நடந்தன.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்பட பல மைதானங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில், 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 53 வகையான போட்டிகளும் நடக்கிறது.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கரூர் காந்திகிராமத்தில், அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து போட்டி நடந்தது.