உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

அரவக்குறிச்சி: க.பரமத்தி, காவிரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சிவ-ராமன், 29. இவர் நேற்று அதிகாலை கரூர் கோவை சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரி-யாத நான்கு சக்கர வாகனம், வேகமாக வந்து சிவராமன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராமனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு சக்கர வாகனம் எது? அதை ஓட்டிய ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ