உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ஆக., 27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் ஆக., 27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் ஆக. 25--வரும், 27ல் கரூரில் காஸ் (எரிவாயு) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப் போக்கு தொடர்பாக, வரும் புகார்கள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம் வரும், 27ம் தேதி மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. எனவே, குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ