குளித்தலையில் ஜமாபந்தி
குளித்தலை:குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நங்கவரம் வருவாய் குறு வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தி அலுவலர் முகமது பைசல், பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார்கள் மகாமுனி, ஜெயவெல், நீதிராஜன், சந்தானம், தீபதிலகை, ஆர்.ஐ., சுகப்ரியா மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.நங்கவரம் வட்டத்தில் உள்ள, 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.