ரூ.50.19 லட்சம் மதிப்புள்ளவேளாண் பொருட்கள் ஏலம்
ரூ.50.19 லட்சம் மதிப்புள்ளவேளாண் பொருட்கள் ஏலம்கரூர்:சாலைபுதுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 50 லட்சத்து, 19 ஆயிரத்து, 786 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,565 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக. 41 ரூபாய், அதிகபட்சமாக, 59.19 ரூபாய், சராசரியாக, 57.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,111 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 54 ஆயிரத்து, 592 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 175.89. அதிகபட்சமாக, 190.10, சராசரியாக, 189.90, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 112.42, அதிகபட்சமாக, 186.30, சராசரியாக, 158.69க்கு ஏலம் போனது. மொத்தம், 12,974 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 20 லட்சத்து 3,574 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 134.59, அதிகபட்சமாக, 193.59, சராசரியாக, 178.89, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 116.99, அதிகபட்சமாக, 143.59, சராசரியாக, 137.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 19,089 கிலோ எடையுள்ள எள், 29 லட்சத்து, 61 ஆயிரத்து, 620 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 50 லட்சத்து, 19 ஆயிரத்து, 786 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.