மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
23-Sep-2024
கரூர்: க.பரமத்தியில், உடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில், க.பரமத்தியில் சாலையின் நடுவே, இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் உள்ளது. கோவை சாலையில் நாள்தோறும், நுாற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கர வாகனங்களிலும், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், கோவை சாலையில் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, க.பரமத்தியில் கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டியது அவசியம்.
23-Sep-2024