துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்: தமிழ்நாடு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் முன்-னேற்ற சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமையில், மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மருத்துவமனை துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம், உயர்த்தி வழங்க வேண்டும். இ.பி.எப்., வழங்க வேண்டும். ஊதியத்-துடன் கூடிய, வார விடுமுறை அளிக்க வேண்டும். துாய்மை பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சுந்தர மூர்த்தி, பொதுச்செ-யலாளர் தமிழ் செல்வி, மாவட்ட துணைத்தலைவர் அசோக்-குமார், செயலாளர் சுப்பிரமணி, எல்.பி.எப்., மாவட்ட தலைவர் அண்ணாவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.