அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்
கரூர், கரூர் மாநகரம் மத்திய வடக்கு பகுதி, அ.தி. மு.க., சார்பில், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, அண்ணா வளைவு பகுதியில், அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். தான்தோன்றி மலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் தினேஷ் குமார், முன்னாள் கவுன்சிலர் கமலா உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.