இளம் வயது திருமணம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், இளம் வயது திருமணத்தை தடுப்போம் என்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கடவூர் வட்டார மருத்துவ அலுவலர்பிரசன்னா தொடங்கி வைத்தார். நாடக குழுவின் தலைவர் வடசேரி சின்னத்துரை தலைமையில் கலை குழுவினரின்,குழந்தை திருமணம் செய்வது, வளரிளம் பருவங்களில் காதல் வயப்படுதல் போன்றவை குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.