உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

கரூர், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஆத்துப்பாளையம் அணைக்கு கடந்த சில நாட்களாக, தண்ணீர் வரத்து இல்லை. ஆத்துப்பாளையம் அணையின், நொய்யல் வாய்க்கால் பகுதி விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !