அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
கரூர்: தமிழ்நாடு அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர் கழகம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் பிரபாகரன் தலைமையில், அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அரசு கல்லுாரிகளில் மாற்றுப் பணியில் அமர்த்தப்பட்ட, அண்ணாமலை பல்கலை கழக உபரி ஆசிரியர்களை, அரசு கல்லுாரிகளில் பணியில் அமர்த்தக் கூடாது உள்ளிட்ட, கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.