உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பவித்திரம் சாலையில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

பவித்திரம் சாலையில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

அரவக்குறிச்சி, லாரிகளை சாலைகளில் நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவித்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பவித்திரம் பகுதியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து பஸ்களில் ஏறி, கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில், கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.தினமும் பவித்திரம் பஸ் நிறுத்தம் முதல் கடைவீதி வரை உள்ள தனியார் ஹோட்டல்கள் முன், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக லாரி உட்பட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன், விதி மீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நிறுத்தப்படும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை