நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்றவர் பலி
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அருகே லிங்கம நாயக்கம்பட்டி பகுதியில், டூவீலரில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால், திடீரென பிரேக் போட்டதில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்அரவக்குறிச்சி அருகே உள்ள, பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன், 54. இவர் கடந்த 12ம் தேதி பள்ளப்பட்டியில் இருந்து, பங்காருபாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.லிங்கம நாயக்கம்பட்டி கட் ரோடு சென்றபோது, நாய் ஒன்று சாலையை கடந்துள்ளது. உடனடியாக பிரேக் போட்டவர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.